Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

பெற்றோரின் கண்முன்னே ஒரு வயது குழந்தைக்கு நிகழ்ந்த சோகம்!

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 வருடமும் 2 மாதங்களும் வயதுடைய ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை தனது பெற்றோருடன் இருந்தபோது பெற்றோரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று தண்ணீர் நிரம்பிய சிறிய தொட்டியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை கிடப்பதைக் கண்ட பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் பிரேதப் பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »