Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகில் மோதல் – இளைஞரொருவர் பலி

 

நிட்டம்புவ – ஹொரகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சைக்களில் வருகை தந்திருந்த குறித்த இளைஞருக்கும், அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூரிய ஆயுதமொன்றினால் இளைஞர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞர், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி தப்பியோடி உள்ள நிலையில், அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »