நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேகொட ஆகியோருக்கு எதிராக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிராகரிப்பு செய்யப்பட்டது.