Our Feeds


Tuesday, March 22, 2022

Anonymous

இராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தார் நிமல் லான்சா - காரணம் இதுதான்

 



நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே தம்மால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.


மேலும், சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு உயரிய சேவைகளை வழங்கவும் தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நிமல் லான்சா தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »