Our Feeds


Saturday, March 19, 2022

SHAHNI RAMEES

மண்ணெண்ணை வரிசையில் 71 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்!

 

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து, மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் இந்த தருணத்தில், அவ்வாறு வரிசையில் காத்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கண்டி – எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்காக காத்திருந்த குறித்த நபர், திடீரென கீழே வீழ்ந்துள்ளார்.


 
இதையடுத்து, அங்கிருந்த சிலர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி – வத்தேகம – உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதான மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »