இன்றைய தினமும், நாடளாவிய ரீதியில் மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,
மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன் P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில், முற்பகல் 10.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும்
மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.