ஆடைகளின் விலைகள் 50 வீதத்தால் அதிகரிக்கப்படலாம் என்று புடவைக் கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் தற்போது சந்தையில் புடவைகளின் விலைகள் 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ஆடை உற்பத்தித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தைத்து முடிக்கப்பட்ட ஆடைகளின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.