Our Feeds


Wednesday, March 23, 2022

Anonymous

ரிஷாதின் அஇமக விலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள 2 MP க்கள் கட்சி முடிவை மீறி ஜனாதிபதி தலைமையிலான சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பு

 



கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும், ஜனாதிபதி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டடுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


“சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை” என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி, அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் கட்சியிலிருந்தும், உறுப்புரிமையிலிருந்தும், கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டவர்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »