Our Feeds


Monday, March 28, 2022

SHAHNI RAMEES

ரணிலுக்கு எதிராக 12 விடயங்களை கொண்ட குற்றப்பத்திரிகை முன்வைப்பு

 

கடந்த அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு குழு மற்றும் செயலகம் என்பன குறித்து விசாரணை செய்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக 12 விடயங்களை கொண்ட குற்றப்பத்திரிகையினை முன்வைத்துள்ளது.

அதில் மூன்று குற்றச்சாட்டுகள் தேசிய நிறைவேற்றுக்குழு, ஊழல் ஒழிப்பு குழு மற்றும் ஊழல் ஒழிப்பு செயலகம் என்பன உருவாக்கப்பட்டமை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த மூன்று குழுக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்தாசை வழங்கியமையின் ஊடாக முன்னாள் பிரதமர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »