Our Feeds


Friday, November 26, 2021

SHAHNI RAMEES

ஐ.நா. எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது - UN உதவிப் பொதுச் செயலாளர்

 

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல்

மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari) தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே கலீட் கியாரி இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரின் போது, பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ்க்கும் (Antonio Guterres) ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் பிரதிபலனாகவே, கலீட் கியாரி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அன்டோனியோ குட்ரெஸ் அவர்களின் வாழ்த்துகளை ஜனாதிபதியிடம் தெரிவித்த கலீட், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை தொடர்பான விசேட அவதானத்துடன் நீண்ட காலம் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். 

சுற்றாடல் தொடர்பாக எமது அரசாங்கம் காட்டும் ஆர்வம் மற்றும் நோக்கு பற்றிய தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த உதவிப் பொதுச் செயலாளர், அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கையின் ஆர்வத்தை பாராட்டினார். 

கடற்படையின் பங்களிப்புடன், கண்டல் தாவரக் கன்றுகள் ஒரு இலட்சத்தை நடுவதற்கும் - சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களின் மூலம் காலநிலை இயற்கை அழிவுகளைத் தடுப்பதற்கும் இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அவருக்கு இதன்போது தெளிவுபடுத்தினார்.

கொவிட்-19 தொற்றுக் காலத்தில், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தைச் சிறப்பாகச் செய்வதற்கும், ஏனைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கொவக்ஸ் வசதிகள் ஊடாக இலங்கைக்கு ஐ. நா. வழங்கிய உதவிகளுக்காக ஜனாதிபதி நன்றியை அவரிடம் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் அப்பிரதேசங்கள் துரித வளர்ச்சி கண்டதனையும் இதன்போது ஜனாதிபத சுட்க்காட்டினார்.

இலங்கைக்கு வருகை தருகின்ற அனைத்து இன மக்களுடனும் ஒன்றிணைந்து செயற்படும் நோக்கத்தில் - ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடரில் நான் கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விடுத்த அழைப்பையும் ஜனாதிபதி உதவிப் பொதுச் செயலாளரிடம் நினைவுகூர்ந்தார்.

அது தொடர்பாக அவர்கள் நல்லெண்ணத்துடன் செயற்படுவார்கள் என்று நான் எதிர்பார்ப்பதனையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் உறவுகள் தொடர்பாக இரு தரப்பினரும் எமது கருத்துக்களை இதன்போது பரிமாறிக்கொண்டனர்.

அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று இலங்கையில் காணப்படுகின்றது.

எமது நீதி அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருப்பதனையும், நீதியரசர் ஒரு தமிழராக இருப்பதனையும், மேலும் பல்வேறு விசேட பதவிகளை வகிப்போர் ஏனைய இனங்களை சேர்ந்தவர்கள் என்பதனையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பாரிய நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதனை தெரிவித்ததுடன், அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டாம் என்றும் அவரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு, கல்வி அடிப்படையாக அமையும் என்பது எம் இரு தரப்பினரதும் கருத்தாக அமைந்தது.

தென்னாபிரிக்கா, இனவாதச் செயற்பாடுகளை ஒழித்துக்கட்டி முன்னோக்கிச் செல்வதற்காக பின்பற்றிய செயற்பாடுகளை ஆய்வு செய்து,

அது தொடர்பாக கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களின் மூலம் செயற்படுத்த முடியுமான விடயங்கள் பற்றி நாம் ஆய்வு செய்து வருவதனையும்,

அதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதனையும் ஜனாதிபதி கலீட் கியாரியிட் நேற்று குறிப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹம்டி (Hanaa Singer – Hamdy), ஐக்கிய நாடுகள் சபையின்  அரசியல் மற்றும் அமைதி நடவடிக்கைகள் துறையின் (DPO) அரசியல் அதிகாரி ஷியாக்கி ஓடா (Chiaki Ota), எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர மற்றும் எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »