Our Feeds


Wednesday, November 17, 2021

Anonymous

ஸஹ்ரானுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் TID யினால் காத்தான்குடியில் ஒருவர் கைது!

 



(கனகராசா சரவணன்)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக  அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள உயிர்jத்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் சகாக்களுடன் கடந்த காலத்தில் தொலைபேசியில் தொடர்பை பேணி வந்துள்ளவர்கள் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல்களையடுத்தே காத்தான்குடி 4 ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை சம்பவ தினமான நேற்று இரவு அவரை அவரது வீட்டில் சைவத்து கைது செய்து விசாரணைக்கான அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »