நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையுடனான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 200 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.