Our Feeds


Tuesday, November 30, 2021

Anonymous

PHOTOS: யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடற்படையினர் குவிப்பு! - பிரதேசத்தில் பதற்றம்

 


யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.


மாதகல் குசுமந்துறை கிராம சேவகர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக காணி அளவீட்டு பணிகள் இன்று காலை நடைபெறவுள்ளது. குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடியுள்ளனா். அதனையடுத்து கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனா்.

(யாழ் நிருபர்)







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »