Our Feeds


Wednesday, November 17, 2021

Anonymous

PHOTOS: பொலிசை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் - பொலிஸ் சிறைகூடத்தில் இளைஞன் உயிரிழப்பு

 



பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறை கூடத்திற்குள் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


குடும்ப தகராறு காரணமாக மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 38 வயதான இளைஞர் ஒருவர் பனாமுர பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனின் சடலம், சிறைக்கூடத்திற்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இளைஞனின் உயிரிழப்புக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு அதிகாரிகள் தற்காலிகமோக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனே, பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் இன்று (17) குற்றஞ்சுமத்தினார்.

எனினும், பொலிஸ் தாக்குதலில் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக கூறப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »