அரசாங்கத்தின் தன்னிச்சையான வேலைத்திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை அமைப்பாளர் சமிந்த டி சில்வாவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (11) மினுவாங்கொடை நகர மத்தியில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் ரணதுங்கவும் இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.