Our Feeds


Wednesday, November 17, 2021

Anonymous

PHOTO: கிளிநொச்சி பரந்தனில் ஒரு குழந்தையின் தந்தை வெட்டிக் கொலை!

 


(கரைச்சி நிருபர்)


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »