Our Feeds


Monday, November 22, 2021

SHAHNI RAMEES

கட்சியின் முடிவை மீறினால் MPக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - ஹக்கீம் எச்சரிக்கை

 

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பது என்ற கட்சி உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானத்தை கட்சி எம்.பிக்கள் மீறினால் அவர்களுக்கு

எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.


இன்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் பேசிய உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் அரசின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


அதேபோல 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த எம் பிக்கள் மீது அப்போதே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காதென பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதனையடுத்து , இம்முறை பட்ஜெட்டை ஆதரவளிக்கும் எம். பிக்களிடம் விளக்கத்தை கோரி அதன் பின்னர் அந்த விளக்கம் திருப்தியில்லாத பட்சத்தில் அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


20ம் திருத்தத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு நடவடிக்கை எடுப்போம் என அறிவித்திருந்த கட்சித் தலைவர் ஹக்கீம் இறுதியில் அவர்களை மன்னித்து விட்டதாக கூறி மன்னிப்பளித்தமை நினைவூட்டத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »