Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

வரலாற்றில் முதல் தடவையாக கல்விக்கு பாரிய நிதி ஒதுக்கீடு l ஆசிரியர்களுக்காக 30 பில்லியன் நிதி

 


எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக 7.51 வீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் நேற்று (10) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்விக்காக வரவு செலவுத்திட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான பாரிய தொகை ஒதுக்கப்படுவதாகவும் பஷில் ராஜபக்ஸ கூறுகின்றார்.

அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »