Our Feeds


Saturday, November 20, 2021

www.shortnews.lk

BREAKING: கொழும்பு, பிரபல ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவம் - நடந்தது என்ன?

 



கொழும்பு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச உணவு உறுபத்தி நிறுவனத்துக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஹோட்டலில் இருந்து வெளியான வாயு கசிவினால் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.

இந்தத சம்பவத்தால் ஏற்பட்ட தீயை கட்டப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபையின் தீயபை்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா். உயிரிழப்புகளோ, மரணங்களோ இதுவரையில் பதிவாக வில்லை என பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணத்தை முறையாக உறுதிப்படுத்தவதற்காக கொழும்பு இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »