Our Feeds


Tuesday, November 9, 2021

Anonymous

BREAKING: மற்றுமொரு மண்சரிவில் இளம் தாதி உயிரிழப்பு l இருவர் அதிஷ்ரவசமாக உயிர் தப்பினர்

 



குருநாகல் − நாரம்மல − வென்னோருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த இளம் பெண் தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதுடையவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்த மண்சரிவு ஏற்படும் சந்தர்ப்பத்தில் வீட்டில், தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மகள் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த மண்சரிவில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »