Our Feeds


Tuesday, November 9, 2021

Anonymous

BREAKING:- மண் சரிவில் மூவர் உயிரிழக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? l வெளியானது பின்னணி - PHOTOS

 



கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், கடும் மழையுடனான வானிலை நிலவிவரும் சந்தர்ப்பத்தில் அபாயகரமான பகுதியில் தங்கியிருந்த இந்த குடும்பத்தை வெளியேற்ற அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து  செய்திப் பிரிவு ஆராய்ந்தது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு, மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரியவை தொடர்புக்கொண்டு வினவியது.

குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தாம் நேற்று அறிவித்தல் பிறப்பித்ததாக அவர் கூறினார்.

தமது அறிவித்தலை ஏற்றுக்கொண்ட இரு குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய போதிலும், மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பம் அங்கிருந்து வெளியேற விருப்பம் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இது அபாயகரமான பகுதி என தாம் பல்வேறு தடவைகள் அறிவுறுத்தல் பிறப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமது அறிவுறுத்தலை ஏற்காத குடும்பமே, இவ்வாறு இன்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். (TC)







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »