Our Feeds


Tuesday, November 9, 2021

Anonymous

மூன்று முஸ்லிம் சிறுமிகளை காணவில்லை - கண்டறிய உதவுமாறு கோரிக்கை

 



கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று (08) காலை 10 மணி முதல் இந்த சிறுமியர் கொழும்பில் சில இடங்களுக்குச் சென்றுள்ளதாக குறித்த சிறுமியரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 – 9.30 மணியளவில் ராஜகிரிய பிரதேசத்தில் இவர்களைக் கண்டதாக குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இது குறித்து பரப்பப்படும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு இலக்கத்திற்கு SHORTNEWS சார்பில் நாம் தொடர்பு கொண்டு வினவிய போது, கொழும்பு வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பில் இணைந்தவர் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »