Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

மீண்டும் முடக்கமா ? : அச்சுறுத்தும் சுகாதாரத் துறை


 

கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் குறையாத நிலையில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமானது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்குமாறு பரிந்துரை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடுமையாக கடைப்பிடிக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் பொதுமக்களின் போராட்டங்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சுகாதார வழிகாட்டுதல்கள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை எனவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் ஒரே நாளில் அதிகளவானோருக்கு கொரோனோ தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »