தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அமைச்சர்களுடன் மதுபானம் அருந்தி பணியாற்றியதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தான் மதுபானமோ அல்லது சிகரட்டோ பயன்படுத்தாத ஒருவர் என்பதை அனைவரும் அறிவார்கள் என அவர் கூறியுள்ளார்.
மதுபானத்திற்கு எதிராகவும், போதைப்பொருளுக்கு எதிராகவும் தனது பதவி காலத்தில் தான் செயற்பட்டதாக மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.