Our Feeds


Tuesday, November 9, 2021

Anonymous

அரசாங்கம் வால் இல்லாத காளை போல் உள்ளது – அமைச்சர் உதய கம்மன்பில

 



டொலர்கள் இல்லாததால் அரசு வால் இல்லாத காளை போல் உள்ளதாகவும் விலைக் கட்டுப்பாட்டை பேண முடியாத நிலைமையில் அரசாங்கம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், தற்போதைய டொலர் நெருக்கடியே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“கேஸ், பால்மா, சீமெந்து தட்டுப்பாடு இந்த டொலர்கள் இல்லாததால்தான் ஏற்பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாட்டை அரசால் பராமரிக்க முடியவில்லை. அப்போது அரசு டொலர் தட்டுப்பாடு மற்றும் டொலர் வறுமையால் தவித்துக்கொண்டிருந்தது, இப்போது அரசாங்கம் வால் இல்லாத காளையைப் போல் உள்ளது, ”என்று அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »