Our Feeds


Monday, November 8, 2021

Anonymous

நான் மட்டுமல்ல, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமரும் வருத்தமடைந்துள்ளார் – விமல் வீரவன்ச

 



அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தான் மாத்திரமல்லாமல் பிரதமரும் வருத்தமடைந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நான் மாத்திரமல்ல பிரதமரும் வருத்தமடைந்துள்ளார் என உங்களுக்கு தெரியவில்லையா?

பொதுஜன பெரமுன கட்சியின் ஆண்டு விழாவில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மனசாட்சியுடன் பேசினார் என விளங்கவில்லையா?

பிரதமரால் சில விடயங்களையே மட்டுமே கூற முடியும். கூற முடியாத விடயங்களும் இருக்கும். இன்னும் 3 வருடங்கள் எங்களுக்கு உள்ளது. இந்த சவால்மிக்க 3 வருடங்களில் எங்களுக்கு இடையில் பரஸ்பர மோதல்களின்றி அனைவரும் ஒன்றாக பயணிக்க முடிந்தால் மட்டுமே இந்த சவாலை வெற்றிக்கொள்ள முடியும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »