Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | இலங்கையின் நிலை

 


சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு 528 ரூபா (இந்திய பெறுமதி) உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, அனைத்து முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட வதந்தியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி வீதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபா உயர்ந்து ரூ. 4620 ரூபாவுக்கு விற்பனையாகிறது. பவுனுக்கு 528 ரூபா உயர்ந்து 36,960 ரூபாவுக்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கரட் தங்கத்தின் விலை 8 கிராம் 39,872ரூபாவுக்கு விற்பனையாகிறது.

எனவே, இதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கை ரூபாவில் 1,500 ரூபா வரையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »