Our Feeds


Monday, November 15, 2021

Anonymous

எதிர்க்கட்சி நாளை நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு : நாளை திட்டமிட்டபடி போராட்டம்

 



ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசார்  முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


கொழும்பில் நாளை (16) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிசார் வாழைத்தோட்டம்  நீதிமன்றிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

எனினும், குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(15) நிராகரித்தது.

இதேவேளை, திட்டமிட்டவாறு நாளைய தினம் போராட்டம் நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »