Our Feeds


Wednesday, November 10, 2021

Anonymous

மீனவர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு

 



மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்திலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து இலங்கை கரையை அண்மித்து மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்கின்றது.

இதன் காரணமாக நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடி மின்னல் தாக்கங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »