எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு செலவு 5 ஆயிரத்து 134 பில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்து 521 பில்லியன் ரூபாய் அரச கடனை திருப்பி செலுத்துவதற்காக செலவிடப்படும் என நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது
இதனிடையே இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் வரி விதிப்புகள் அதிகரிக்கப்படலாம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது