Our Feeds


Wednesday, November 10, 2021

SHAHNI RAMEES

ஆசிரியர் சம்பள முரண்பாடுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் பிரதமர்


 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவும் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வை பெற்றுத் தருவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »