Our Feeds


Tuesday, November 9, 2021

SHAHNI RAMEES

மண்வெட்டியால் அடித்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையினால் பரபரப்பு

 

களுத்துறை, அகலவத்தை பொலிஸ் பிரிவின் குடலிகம - நேபட பிரதேசத்தில் மண்வெட்டியால் அடித்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடிபோதையினால் ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 46 வயதுடைய நேபட பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றயை தினம் மத்துகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »