Our Feeds


Friday, November 19, 2021

SHAHNI RAMEES

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்,

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஷேன் மெக்டெர்மொட் கொவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார்.

அவர் இப்போது அணி உறுப்பினர்களிடமிருந்து விலகி, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இலங்கை அணியின் அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளிலேயே மெக்டெர்மொட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பயிற்சியாளர்கள் தேசிய அணியுடன் காலியில் அண்மைய நாட்களில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் எந்த ஒரு வீரர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறினார்.

இலங்கையின் அனைத்து வீரர்களும், பயிற்சியாளும், ஊழியர்களும் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளதனால் முதல் டெஸ்ட் போட்டியின் துவக்கம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »