Our Feeds


Monday, November 15, 2021

SHAHNI RAMEES

வரவு செலவு திட்ட விவாதத்தில் நிதியமைச்சர் பெசில் இல்லையாம்!


வரவு -செலவு திட்ட விவாதத்தில் நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க நிதி அமைச்சர் சபையில் இல்லை, எனவே அவரை சபைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் சம்பிரதாய முறைப்படி நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்லவும் சபையில் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.


நாடாளுமன்றத்தில் இன்று (15) திங்கட்கிழமை, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்க்ஷமன் கிரியெல்ல,

நாட்டின் முக்கியமான விடயங்களை முன்வைத்து வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறும் நிலையில்,  நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க நிதி அமைச்சர் சபையில் இல்லை. உரிய அமைச்சர்கள் எவரும் இல்லை, விடயப் பரப்பு தெரியாத, தெளிவு இல்லாத நபர்கள் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்றார்.


இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க : – சம்பிரதாய முறைப்படி நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும், ஆனால் அவர் சபையில் இல்லை, எனவே நாளைய (16) தினத்திலிருந்து அவர் வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்குபற்ற வேண்டும் என்ற கோரிக்கையொன்றை முன்வைப்போம் என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »