நாடு எதிர்கொண்டுள்ள பாரதூரமான நெருக்கடி நிலைமை தொடர்பில் யாருக்கும் புரிதல் இல்லை என்று இலங்கை கமியுனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளா் டிவ் குணசேகர குற்றுஞ்சாட்யுள்ளாா்.
கடந்த சில நாட்களாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த நாட்களில் எடுக்கப்பட்ட சகல தீர்மானங்களும் முட்டால்தனமானவையாகும். சீனி, நெல், அரிசி, உரம், ஞானசார தேரரின் பிரச்சினை என வெவ்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இவை எவருக்கும் தெரியவில்லையா என்பதே எனது கேள்வி. தவறு என்று புரியவில்லையா?
பணத்தை அச்சிட்டே அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2,000 பில்லியன் வரையில் பணம் அச்சீட்டு இருக்கிறாா்கள்.
பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். நாட்டில் டொலர் இருப்பில் இல்லை. ரூபாவும் இல்லை.
எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பில் தெரியவில்லை. மக்களும் தெரிவதாக இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.