கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்தார்.
இன்றிரவு 10 மணி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை குறித்த பகுதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே வீதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.