Our Feeds


Tuesday, November 9, 2021

Anonymous

மாளிகாவத்தை மும்தாஜ் படுகொலை செய்யப்பட்ட பயணப்பையில் போட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவம் - பிரதான சந்தேக நபர் கைது

 



சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பைத்தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாளிகாவத்தையைச் ​சேர்ந்த 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய பிரதான சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து படுகொலைச் செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், வைத்திருந்த பணம், ப​டுகொலைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உலக்கை, சடலத்தை எடுத்துச் சென்ற ஓட்டோ உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன என சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »