Our Feeds


Saturday, November 13, 2021

SHAHNI RAMEES

சிறுமி கொலை: சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்!

 


தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபரை

கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கருதப்படும் 35 வயதுடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் தம்புள்ளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சிறுமிக்கு பாடம் கற்பிக்கவென 14 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற நபரே இவ்வாறு தலைமறைவாகியிருந்தார். சிறுமியின் உடல் நிர்வாணமான நிலையில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »