Our Feeds


Wednesday, November 17, 2021

SHAHNI RAMEES

இந்தியாவில் உயிரிழந்தது அங்கொட லொக்காதான் - அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது எப்படி?


 
இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே சந்தன லசந்த பெரேரா 2020 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் மாரடைப்பால் காலமானார்.

ஆனால் அவரது அடையாளத்தில் ஏற்பட்ட பிரச்சினையால், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த இந்திய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »