Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை

 

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்தார்.

மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றிரவு 10 மணி முதல் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து மறுஅறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணி முதல் இந்த வீதியின் ஊடான போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

பயணிகள் போக்குவரத்தை கருத்திற் கொண்டே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, இலகுரக வாகனங்களுக்கு மாத்திரமே இந்த வீதியூடாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் தொடர்ந்தும் மாற்று வீதியின் ஊடாக பயணிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எனினும், பயணிகள் போக்குவரத்தை கருத்திற் கொண்டு, பயணிகளுடனான பஸ்களை மாத்திரம் இந்த வீதியூடாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதைவிடுத்து, டிபர், கனரக லொறிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இந்த வீதியூடாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரி;ய தெரிவிக்கின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »