தொடர் மழை மண்சரிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் தண்டவாளத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான எட்டு ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலைக்கு மத்தியிலும் ஊழியர்கள் தற்போது பாதையை புனரமைக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது