Our Feeds


Wednesday, November 10, 2021

SHAHNI RAMEES

நாவலப்பிட்டி-ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு


நாவலப்பிட்டி-ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவான்புர பகுதியில் இன்று (10) காலை 11 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.

இப்பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால், ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மண்ணை அகற்றி இயல்பு நிலை திரும்பும் வரை நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புகஸ்தலாவ மற்றும் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

க.கிஷாந்தன்

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »