Our Feeds


Friday, November 19, 2021

Anonymous

சமையல் எரிவாயு - கேஸ் குறித்து தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு

 



எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும் இன்னும் 06 நாட்களுக்குள், அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்தத் தொகையை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன், அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைகிறது. எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்கும். எனவே, சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எவ்வித குறைப்பாடும் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »