Our Feeds


Wednesday, November 10, 2021

Anonymous

நீங்கள் மண்சரிவு அபாயமிக்க பகுதியில் வசிப்பவரா?

 



மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த வீட்டில் வசித்தவர்களுக்கு முன்கூட்டியே வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்த போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் அங்கு இருந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »