Our Feeds


Tuesday, November 16, 2021

Anonymous

ஞானசாரரை செயலணியின் தலைவராக்கி இலங்கை முஸ்லிம்களை மிரட்டப் பார்க்கிறீர்களா? - ரிஷாத் பதியுத்தீன் காட்டம்

 



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி” எனக்கூறி கேவலப்படுத்திய ஒருவரை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப் பார்க்கின்றீர்களா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கேள்வி எழுப்பினார்.


 

 நாடாளுமன்றத்தில் இன்று (16) செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டிலே தனியார் சட்டங்களில் சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம் , மதம், கலாசாரம் தொடர்பில் உள்ளன. அதேபோன்று தேசவழமை சட்டம்,கண்டிய சட்டம் போன்றவையும் உள்ளன. இவற்றை இல்லாதொழித்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஒன்றை கொண்டு வருவதற்காக ”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் ”எனக்கூறிய ஞானசார தேரரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிதுள்ளீர்கள்.



இந்த உலகில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட 200 கோடி முஸ்லிமாக்கள் உள்ளனர். அல்லாஹ்வை வஞ்சிப்பதை அல்லாஹ்வை ஏசுவதனை ஏற்றுக்கொள்ளாத 54 முஸ்லீம் நாடுகள் உள்ளன.

அவ்வாறிருக்கையில் ”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் ”எனக்கூறிய ஒரு குற்றவாளியை முன்னாள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை செயலணியின் தலைவராக நியமித்ததன் நோக்கம் என்ன?அல்லாஹ்வை கேவலப்படுத்திய ஒருவரை நியமித்தான் மூலம் நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள் எனக் கெள்வியெழுப்பினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »