களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அடுத்துவரும் சில மணி நேரங்களில் களு கங்கைக்கு அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி புளத்சிங்கள, பதுரெலிய, பலிந்தநுவர, மில்லனிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.