Our Feeds


Thursday, November 11, 2021

Anonymous

மொஹமட் இன்திகாப் - ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியிலிருந்து இராஜினாமா

 



ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியிலிருந்து கலாநிதி தயானந்த பண்டா மற்றும் மொஹமட் இன்திகாப் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். 


ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியில் உலமா சபையின் காலி கிளை தலைவர் மௌலவி மொஹமட், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், அஸீஸ் நிஸார்தீன் மற்றும் மொஹமட் இன்திகாப் சுபர் ஆகிய 4 முஸ்லிம்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மொஹமட் இன்திகாப் சுபர் குறித்த பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நேற்று மூன்று தமிழர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »