Our Feeds


Sunday, November 21, 2021

SHAHNI RAMEES

அரசாங்கத்திற்கு எதிராக அடுத்ததாக வீதிக்கு இறங்கவுள்ள மற்றொரு தரப்பினர்

 

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகளை புறக்கணித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎதிர்வரும் 29ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில்

வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா அரச அதிகாரிகளின் தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளா் பிரதீப் பஸ்நாயக்க,

அர அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்ட எழுத்து மூல கோரிக்கைக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னா் எங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவி ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய, கிராம அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், முகாமையாளர் சேவை அதிகாரிகள், விவசாய பரிசோதனை உதவி அதிகாரிகள், காரியாலய சேவை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என பிரதீப் பஸ்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளாா்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »