க.பெ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நாளையிலிருந்து (10) எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளா் நாயகம் அறிவித்துள்ளாா்.
இதேவேளை, 2020ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயன்முறை பரீட்சை எதிர்வரும் டிசம்பா் மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரையில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளாா்.