Our Feeds


Wednesday, November 10, 2021

SHAHNI RAMEES

இனிமேல் வீட்டைவிட்டு ரகசியமாக வெளியேறினால் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்படுவீர்கள். - நடன நட்சத்திரம் ஆக வேண்டுமென்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறிய 3 முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கும் நீதவான் கடும் எச்சரிக்கை!


 கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதாகக் கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்தபோது வீடு திரும்பிய 3 சிறுமிகளும் பிணையம் ஒன்றின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று சிறுமிகளும் நேற்று வாழைத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று பிணையம் ஒன்றின் கீழ் அம்மூன்று சிறுமிகளும் இவ்வாறு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.

இதன் பிறகு, வீட்டுக்கு தெரியாமல் இரகசியமாக அங்கிருந்து வெளியேறினால், பிணையம் இரத்துச் செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்படுவர் என இதன்போது நீதிவான் 3 சிறுமிகளையும் எச்சரித்தார்.

இந்த நிலையில் இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »